தி மன்ஹாட்டன் ப்ராஜெக்ட்டும் டூம்ஸ் டே கிளாக்கும்
16.01.2010
டிசம்பர் 1945-ல் அமெரிக்காவில் மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் (The Manhattan Project) எனும் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவலையுடன் ஒன்று கூடினார்கள். The Bulletin of the Atomic Scientists என்றொரு பத்திரிகை தொடங்கினார்கள். நியூயார்க்கிலுள்ள மன்ஹாட்டனை வளப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு எதற்கு பத்திரிகை என்றால்,
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்கா இரண்டு குண்டுகள் போட்டதே, அணுகுண்டு, அதனை உருவாக்க அமெரிக்கா உருவாக்கிய திட்ட்ததிற்குத் தான் The Manhattan Project என்ற இந்த சங்கேதப் பெயராம். அமெரிக்கா தலைமையில் நடந்த இத்திட்டத்தில் கனடா, மற்றும் பிரிட்டனும் கூட்டு. அமெரிக்கா ராணுவம் தன் பொறுப்பில் இத்திட்டத்தை நிகழ்த்தியது.
திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்கா பட்டாசு வெடித்துக் கொண்டாடவில்லை. அந்தக் குண்டையே போட்டுக் கொண்டாடி விட்டார்கள். ஜப்பான் கை தூக்கி சரணடைய ஒரு வழியாய் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இந்த திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு குழுவினர் தான் அந்த சிகாககோ பல்கலை விஞ்ஞானிகள். தங்களின் பங்களிப்பு வெற்றியடைந்தாலும் ஏதோ கவலை வந்துவிட்டது. பரிகாரம் முடியாது வேறு ஏதாவது செய்வோம் என்று கூடித் தான் அந்த பத்திரிகை ஆரம்பித்தார்கள். தாங்கள் கண்டுபிடித்து கட்டவிழ்த்து விட்ட விபரீதத்தின் கொடுமையை உலகுக்குச் சொல்லி எச்சரிப்பது அப்பத்திரிகையின் பணி.
இதனிடையே, உலகப் போர் முடிந்தாலும் தாதாக்கள் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நானா, நீயா என்று பனிப்போர் தொடங்கி விட்டிருந்தன. சந்தைக்கு வந்துவிட்ட அணு ஆயுதம் சேர்க்க ஆரம்பித்தார்கள். பத்திரிகை ஆரம்பித்த விஞ்ஞானிகளுக்கு கவலை அதிகமானது. பயந்து கிடக்கும் உலகத்தை எச்சரித்தாலும் சரி, மேலும் பயமுறுத்தினாலும் சரி என்று புதிய திட்டம் ஒன்று தீட்டினார்கள். அது தான் Doomsday Clock எனப்படும் உலக அழிவு நாள் கடிகாரம். ஓர் அடையாளச் சின்னம்.
நள்ளிரவு 12 மணி என்பது உலக அழிவு நேரம். அதற்கு இன்னம் எத்தனை நிமிடம் இருக்கும் என்பதை இந்தக் கடிகாரம் குறிப்பிடும். உலகிலுள்ள சூழ்நிலையைக் கொண்டு அது நிர்ணயிக்கப்படும். மாறிவரும் நிலைக்கு ஏற்ப நிமிடங்கள் குறையும், அதிகரிக்கும். இதனை உருவாக்கிய 1947ம் ஆண்டு அந்த நள்ளிரவுக்கு இன்னம் ஏழு நிமிடங்கள் இருக்கின்றன என்று நிர்ணயித்தார்கள்.
1953-ம் வருடம் அமெரிக்காவும் சோவியத்தும் தங்களது அணு ஆயுதத் திட்டங்களை பரீட்சித்துப் பார்க்கத் துவங்கியதும் ரெண்டே நிமிஷம் தான் பாக்கி என்று சொல்லி விட்டார்கள் அது பொய்த்து விட்டது. பிறகு அந்தக் கடிகாரத்தின் முள்ளை மேலும் கீழுமாய் இது வரை 17 முறை தள்ளி வைத்து விட்டார்கள். இப்பொழுது ஜனவரி 14ந் தேதி பதினெட்டாவது முறையாக முள்ளை ஒரு நிமிடம் பின்னுக்கு இழுத்து நகர்த்தியிருக்கிறார்கள். நள்ளிரவுக்கு 6 நிமிடம் இருக்கிறதாம். மனித குலம் மேன்மையுற்றுவிடும் என்று விஞ்ஞானிகள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எப்படியாயினும் நள்ளிரவை நோக்கி கடிகாரம் நகர்ந்து கொண்டிருப்பதால் இந்த விஞ்ஞானிகள் சில அவசர பரிந்துரைகள் சொல்கிறார்கள். அமெரிக்காவும். ரஷ்யாவும் அணு ஆயுதங்களை குறைத்தல், நிலக்கரியில் இயங்கும் தொழிற்கூடங்களில் உள்ள பழைய இயந்திரங்களை நீக்கிவிட்டு சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த புதிய இயந்திரங்கள் நிர்மாணிப்பது இப்படி பேசிப் பேசி ஏதாவது சாதிக்கிறார்களா என்று நாம் செய்திகளை கவனித்துக் கொண்டிருக்கலாம். தோன்றியதைப் போல் இயற்கையாய் உலகம் அழியும். அது வரை பூமி ஆரோக்கியமாய் இருக்க தனி மனிதனாய் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது செய்ய முடியும். அதற்கு குறைந்த பட்சம் கரியமிலவாயு நம் பங்கிற்கு துப்பாமல் இருப்பது எப்படி என்று நாம் யோசித்தல் நலம்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்கா இரண்டு குண்டுகள் போட்டதே, அணுகுண்டு, அதனை உருவாக்க அமெரிக்கா உருவாக்கிய திட்ட்ததிற்குத் தான் The Manhattan Project என்ற இந்த சங்கேதப் பெயராம். அமெரிக்கா தலைமையில் நடந்த இத்திட்டத்தில் கனடா, மற்றும் பிரிட்டனும் கூட்டு. அமெரிக்கா ராணுவம் தன் பொறுப்பில் இத்திட்டத்தை நிகழ்த்தியது.
திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்கா பட்டாசு வெடித்துக் கொண்டாடவில்லை. அந்தக் குண்டையே போட்டுக் கொண்டாடி விட்டார்கள். ஜப்பான் கை தூக்கி சரணடைய ஒரு வழியாய் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இந்த திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு குழுவினர் தான் அந்த சிகாககோ பல்கலை விஞ்ஞானிகள். தங்களின் பங்களிப்பு வெற்றியடைந்தாலும் ஏதோ கவலை வந்துவிட்டது. பரிகாரம் முடியாது வேறு ஏதாவது செய்வோம் என்று கூடித் தான் அந்த பத்திரிகை ஆரம்பித்தார்கள். தாங்கள் கண்டுபிடித்து கட்டவிழ்த்து விட்ட விபரீதத்தின் கொடுமையை உலகுக்குச் சொல்லி எச்சரிப்பது அப்பத்திரிகையின் பணி.
இதனிடையே, உலகப் போர் முடிந்தாலும் தாதாக்கள் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நானா, நீயா என்று பனிப்போர் தொடங்கி விட்டிருந்தன. சந்தைக்கு வந்துவிட்ட அணு ஆயுதம் சேர்க்க ஆரம்பித்தார்கள். பத்திரிகை ஆரம்பித்த விஞ்ஞானிகளுக்கு கவலை அதிகமானது. பயந்து கிடக்கும் உலகத்தை எச்சரித்தாலும் சரி, மேலும் பயமுறுத்தினாலும் சரி என்று புதிய திட்டம் ஒன்று தீட்டினார்கள். அது தான் Doomsday Clock எனப்படும் உலக அழிவு நாள் கடிகாரம். ஓர் அடையாளச் சின்னம்.
நள்ளிரவு 12 மணி என்பது உலக அழிவு நேரம். அதற்கு இன்னம் எத்தனை நிமிடம் இருக்கும் என்பதை இந்தக் கடிகாரம் குறிப்பிடும். உலகிலுள்ள சூழ்நிலையைக் கொண்டு அது நிர்ணயிக்கப்படும். மாறிவரும் நிலைக்கு ஏற்ப நிமிடங்கள் குறையும், அதிகரிக்கும். இதனை உருவாக்கிய 1947ம் ஆண்டு அந்த நள்ளிரவுக்கு இன்னம் ஏழு நிமிடங்கள் இருக்கின்றன என்று நிர்ணயித்தார்கள்.
1953-ம் வருடம் அமெரிக்காவும் சோவியத்தும் தங்களது அணு ஆயுதத் திட்டங்களை பரீட்சித்துப் பார்க்கத் துவங்கியதும் ரெண்டே நிமிஷம் தான் பாக்கி என்று சொல்லி விட்டார்கள் அது பொய்த்து விட்டது. பிறகு அந்தக் கடிகாரத்தின் முள்ளை மேலும் கீழுமாய் இது வரை 17 முறை தள்ளி வைத்து விட்டார்கள். இப்பொழுது ஜனவரி 14ந் தேதி பதினெட்டாவது முறையாக முள்ளை ஒரு நிமிடம் பின்னுக்கு இழுத்து நகர்த்தியிருக்கிறார்கள். நள்ளிரவுக்கு 6 நிமிடம் இருக்கிறதாம். மனித குலம் மேன்மையுற்றுவிடும் என்று விஞ்ஞானிகள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எப்படியாயினும் நள்ளிரவை நோக்கி கடிகாரம் நகர்ந்து கொண்டிருப்பதால் இந்த விஞ்ஞானிகள் சில அவசர பரிந்துரைகள் சொல்கிறார்கள். அமெரிக்காவும். ரஷ்யாவும் அணு ஆயுதங்களை குறைத்தல், நிலக்கரியில் இயங்கும் தொழிற்கூடங்களில் உள்ள பழைய இயந்திரங்களை நீக்கிவிட்டு சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த புதிய இயந்திரங்கள் நிர்மாணிப்பது இப்படி பேசிப் பேசி ஏதாவது சாதிக்கிறார்களா என்று நாம் செய்திகளை கவனித்துக் கொண்டிருக்கலாம். தோன்றியதைப் போல் இயற்கையாய் உலகம் அழியும். அது வரை பூமி ஆரோக்கியமாய் இருக்க தனி மனிதனாய் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது செய்ய முடியும். அதற்கு குறைந்த பட்சம் கரியமிலவாயு நம் பங்கிற்கு துப்பாமல் இருப்பது எப்படி என்று நாம் யோசித்தல் நலம்.
World News
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை
- இங்கிலாந்தில் புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற இளைஞர்
- பெண்களுக்கு சிவப்பு நிறத்தின் மீது மோகம் ஒரு காம்ப்ளக்ஸ்
- பாக்கு அதிகம் சாப்பிட்டால் வாய் புற்றுநோய் அபாயம் - ஆய்வறிக்கை


