ஓசோனில் 250 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு ஓட்டை
| 18.10.2011 |
|

அதிக வெப்பம் வெளியிடப்படுவதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும், நிலம், நீர் மற்றும் காற்று வேகமாக மாசுப் படுவதாலும் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு வருகிறது. அதன் அளவு சுமார் 97 லட்சம் சதுர மைல்கள் அதாவது 250 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு இருக்கிறது என்று செயற்கைக் கோள்களின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஓசோன் ஓட்டை படம் பிடிக்கப்பட்டு அளக்கப்பட்டது. இன்றைய வட அமெரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவுக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. ஏற்கெனவே ஒரு முறை இதைவிட அதிக அளவில் இந்த ஓட்டை அளக்கப்பட்டிருக்கிறது. அதாவது 2006ல் 1,060 லட்சம் சதுர மைல்கள் அளவுக்கு ஓட்டை இருந்தது.
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் கூடி உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் தான் புவியைக் காப்பாற்ற முடியும். அண்டார்டிகா துருவப்பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது என்பதை 1970களில் செயற்கைக் கோள்கள் தான் முதல் முறையாகக் கண்டுபிடித்தன. ஆனால் அது குறித்து கவலைப்பட்டும் எச்சரித்தும் பேசிய உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்துமே ஓசோன் படலம் ஓட்டை விழாமல் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.
1980களிலும், 1990களிலும் இந்த ஓட்டை பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. ஆர்டிக் கடல்பகுதியில் பூமிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் கடுமையான குளிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு ஓசோன் படலத்தைக் கரையவைக்கும் ரசாயனங்கள் உயிர்ப்படைந்து ஓட்டையைப் பெரிதாக்கின. பூமிக்கு மேலே உள்ள பகுதியில் வேண்டுமானால் ஓசோன் என்பது மாசுப்படலமாக இருக்கலாம். ஆனால் விண்வெளியிலிருந்து புவியை நோக்கி வரும் பாதகமான புறஊதாக் கதிர்களைத் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பும் கேடயமாக ஓசோன் படலம் செயல்படுகிறது.
குளோராபுளோரா கார்பன்கள் தான் ஓசோன் படலத்தைத் துளைக்கின்றன என்பதால் அவற்றுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓரளவுக்கு ஓசோன் படலம் மீட்சி பெற்று வருகிறது. அப்படியும் மிக மெதுவாக இந்தச் சிதைவு தொடர்கிறது. பூமியிலிருந்து 8.7 மைல் முதல் 13.7 மைல் வரையிலான உயரத்தில் தான் (14 கிலோமீட்டர் முதல் 22 கிலோமீட்டர் வரை) இந்தச் சிதைவு ஏற்பட்டிருக்கிறது.
முதல் முறையாக இந்த ஆண்டு ஆர்டிக் கடல் பரப்பிலும் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்கிறது. இம்மாதம் 27ம் தேதி நாசாவின் மற்றொரு செயற்கைக் கோள் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள சிதைவின் தன்மையை வெகு நெருக்கமாகச் சென்று படம் பிடித்து ஆய்வு செய்யப் போகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஓசோன் ஓட்டை படம் பிடிக்கப்பட்டு அளக்கப்பட்டது. இன்றைய வட அமெரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவுக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. ஏற்கெனவே ஒரு முறை இதைவிட அதிக அளவில் இந்த ஓட்டை அளக்கப்பட்டிருக்கிறது. அதாவது 2006ல் 1,060 லட்சம் சதுர மைல்கள் அளவுக்கு ஓட்டை இருந்தது.
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் கூடி உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் தான் புவியைக் காப்பாற்ற முடியும். அண்டார்டிகா துருவப்பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது என்பதை 1970களில் செயற்கைக் கோள்கள் தான் முதல் முறையாகக் கண்டுபிடித்தன. ஆனால் அது குறித்து கவலைப்பட்டும் எச்சரித்தும் பேசிய உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்துமே ஓசோன் படலம் ஓட்டை விழாமல் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.
1980களிலும், 1990களிலும் இந்த ஓட்டை பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. ஆர்டிக் கடல்பகுதியில் பூமிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் கடுமையான குளிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு ஓசோன் படலத்தைக் கரையவைக்கும் ரசாயனங்கள் உயிர்ப்படைந்து ஓட்டையைப் பெரிதாக்கின. பூமிக்கு மேலே உள்ள பகுதியில் வேண்டுமானால் ஓசோன் என்பது மாசுப்படலமாக இருக்கலாம். ஆனால் விண்வெளியிலிருந்து புவியை நோக்கி வரும் பாதகமான புறஊதாக் கதிர்களைத் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பும் கேடயமாக ஓசோன் படலம் செயல்படுகிறது.
குளோராபுளோரா கார்பன்கள் தான் ஓசோன் படலத்தைத் துளைக்கின்றன என்பதால் அவற்றுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓரளவுக்கு ஓசோன் படலம் மீட்சி பெற்று வருகிறது. அப்படியும் மிக மெதுவாக இந்தச் சிதைவு தொடர்கிறது. பூமியிலிருந்து 8.7 மைல் முதல் 13.7 மைல் வரையிலான உயரத்தில் தான் (14 கிலோமீட்டர் முதல் 22 கிலோமீட்டர் வரை) இந்தச் சிதைவு ஏற்பட்டிருக்கிறது.
முதல் முறையாக இந்த ஆண்டு ஆர்டிக் கடல் பரப்பிலும் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்கிறது. இம்மாதம் 27ம் தேதி நாசாவின் மற்றொரு செயற்கைக் கோள் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள சிதைவின் தன்மையை வெகு நெருக்கமாகச் சென்று படம் பிடித்து ஆய்வு செய்யப் போகிறது.
- பூமியை போன்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- உலகின் அதி விரைவு வாகனம் SKYLON
- சூரியனை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோள்
- பூமியை தாக்கிய சூரியப் புயல்
- பல விண்கற்கள் மோதி இணைந்து பூமி உருவாகியிருக்கலாம்
- GJ 1214-B உயிரினங்கள் வாழ தகுதியுடைய புதிய கிரகம்
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள்
- பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றும் விண்கற்கள்
- புதிய வைர கிரகங்கள் கண்டுபிடிப்பு
- மிகப்பெரிய 18 புதிய நட்சத்திர கிரகங்கள் கண்டுபிடிப்பு
- பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- செவ்வாயில் புயல் காற்றினால் உருவான மணல் குன்றுகள்
- உயிர்கள் வாழ புதிய கோள்களைத் தேடி விஞ்ஞானிகள்
- வியாழன் கிரகத்தை சுற்றி வரும் நிலாவில் தண்ணீர்
- சூரிய குடும்பத்தின் எல்லைக்குள் வேற்று கிரகவாசிகள்
- பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் கடக்கும் விண்கல்
- பூமிக்கு நிகரான குளிர்ச்சியான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- ஓசோனில் 250 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு ஓட்டை
- வீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்
- சந்திரனில் அதிகளவில் டைட்டேனியம் தாதுக்கள் உள்ளது - விஞ்ஞானிகள்
- இரட்டை சூரியன்களை சுற்றி வரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- சந்திரனை முழுமையாக ஆராய இரட்டை செயற்கைகோள் - நாசா
- இந்தியா விண்வெளி ஆய்வில் கனடாவைப் முந்தியது
- ஒளிரும் வளையங்களுடன் சனி கிரகம்
- 2030ல் செவ்வாய் கிரகத்தில் உணவுக்காக தோட்டம் அமைக்கத் திட்டம்
- விண்வெளியில் நட்சத்திரத்தை விழுங்கும் கரும்பள்ளம்
- முழுவதும் வைரத்தாலான புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு
- மனித உடலை விட குளிர்ச்சியான நட்சத்திரங்கள்
- 2013ல் விண்வெளியிலிருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
- கருப்பு நிறத்தில் ட்ரெஸ்-2 பி என்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்தன - புதிய ஆய்வில் தகவல்
- சனி கிரகத்தில் தண்ணீர் கண்டுப்பிடிப்பு
- பூமியின் முதல் ட்ரோஜன் கிரகம் கண்டுபிடிப்பு
- புளூட்டோவை சுற்றி வரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- நெப்டியூன் கிரகம் சூரியனை முழுமையாக சுற்றி வர 165 ஆண்டுகள்
- பூமியில் விண்கல் மோதினால் பாதிக்கும் நாடுகள் - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|












